மொட்டு கட்சி பொய்யாக கூட்டணி அமைக்காது: சாகர காரியவசம்
மொட்டு கட்சி பொய்யாக கூட்டணிகளை அமைக்காது என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பு மனுக்களில் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு கூடுதல் சந்தர்ப்பம் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
வேட்பு மனு தயாரிப்பு தொடர்பில் இரண்டு குழுக்கள் நிறுவப்பட்டுள்ளது.கீழ் மட்ட குழுவினால் தீர்மானங்களை எடுக்க முடியாத நிலையில் உயர் மட்ட குழுவின் உதவி பெற்றுக்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
பொதுஜன முன்னணியின் தேசியவாத கொள்கை
தேசியவாத முகாம்களை ஒன்றிணைத்து இந்த தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாகவும், இணக்கப்பாடில்லா தரப்புக்களுடன் இணைந்து பொய்யாக கூட்டணிகள் அமைக்கப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுஜன முன்னணியின் தேசியவாத கொள்கைகளுக்கு இணங்கக்கூடிய தரப்புக்கள் மட்டும் கூட்டணியில் இணைந்து கொள்ள முடியும் எனவும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri
