யாராக இருந்தாலும் கண்டிப்பாக பதிலடி கொடுப்போம்! சபதம் செய்த ஈரான் - இப்படிக்கு உலகம்
தங்கள் நாட்டுக்கு சொந்தமான சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் கண்டிப்பாக பதிலடி கொடுப்போம் என ஈரான் சபதம் செய்துள்ளது.
இந்த வார தொடக்கத்தில், சிவப்பு கடலில் ஐ.ஆர்.ஜி.சி-க்கு சொந்தமான Saviz சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
கப்பலின் அடிப்பகுதியில் பொருத்தப்பட்ட கன்னி வெடி அல்லது ஏவுகணை மூலம் தாக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது.
இந்நிலையில், தாக்குதல் நடத்தியது யார் என தெரியவந்த பிறகு கட்டாயம் பதிலடி கொடுப்போம் என ஈரான் ஆயுதமேந்திய படைகளின் செய்தித்தொடர்பாளர் Maj. Gen. AbuAl-Fadel Shkarji கூறியுள்ளார்.