விவசாய உள்ளீடுகளுக்கான விலையினை குறைக்க வேண்டும்! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
அரசாங்கம் நெல்லை 120 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்படும் எனவும் அரிசியின் விற்பனைவிலை 220 ரூபாய் என அறிவிக்கின்றனர். அப்படியானால் அந்த மேலதிகமான 100 ரூபாய் யாருக்கு போகின்றது என விவசாய அதிகார சபையின் செயலாளர் ஜெயானந்தன் நிறஞ்சனகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
எனவே விவசாயிகளின் பிரச்சனைகளை கருத்தில் கொண்டு சரியான நேரத்தில் சரியான தீர்மானங்களை எடுக்காமல் விட்டால் கடந்த கால பிரச்சனைகள் எதிர்காலத்தில் ஏற்படலாம் என்றும் கூறியுள்ளார்.
மாவட்ட தேசிய கமக்கார அதிகார சபையின் ஊடக சந்திப்பு இன்று வியாழக்கிழமை (06.02.2025) மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இடம்பெற்றது.
நெல் அறுவடை
இதன்போது மோலும் கருத்து தெரிவித்த அவர்,
நாட்டில் அதிகமான பிரதேசங்களில் நெல் அறுவடை இடம் பெற்று வருகின்ற நிலையில் விவசாய பிரதி அமைச்சர் தலைமையில் கொழும்பில் நெல் விலை தொடர்பில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது காய்ந்த நெல்லின் விலை 120 ரூபாவக கொள்வனவு செய்வதாக அறிவிக்கப்பட்டது. அதேவேளை அரிசியின் விலை 220 ரூபாய் என அறிவிக்கின்றனர் அப்படியானால் அந்த மேலதிகமான 100 ரூபாய் யாருக்கு போகின்றது.
அரிசி ஆலை உரிமையாளர்கள்
உண்மையில் அரிசி ஆலை உரிமையாளர்களின் செலவை சேர்த்தால் 158 ரூபாதான் செலவாகப் போகின்றது. இலாபத்தையும் சேர்த்து பார்த்தால் 175 ரூபாய் தான் செலவாகப் போகின்றது.
ஆனால் கிட்டத்தட்ட 40 ரூபாய் யாருக்கு போகின்றது என தெரியாத நிலையே உள்ளது. அத்துடன் இந்த விவசாயத்தில் இ:படுகின்ற விவசாயிக்கு இதில் ஒரு ரூபா கூட இல்லை அதேபோல அரிசி பாவனையாளர்களுக்கும் ஒரு ரூபா கூட கிடைக்க வில்லை இந்த 40 ரூபா யாருக்கு போகின்றது? என கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |