குரங்குகளை கொலை செய்வதில் தவறில்லை – எஸ்.பி. திஸாநாயக்க
குரங்குகளை கொலை செய்வதில் தவறில்லை என முன்னாள் அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
குரங்குகள் உள்ளிட்ட கூடுதலாகக் காணப்படும் விலங்குகளை கொலை செய்ய வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
விலங்குகளை கொலை செய்வது குறித்து சிலர் கருத்து வெளியிட்டு வரும் போதிலும் அவற்றை கருத்திற்கொள்ளத் தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சூழலியலாளர்களின் கருத்துக்கள்
நாடு முழுவதிலும் ஆண்டுதோறும் தெருநாய்கள் கொல்லப்படுவதாகத் தெரிவித்துள்ளார். விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்தவின் கருத்துடன் பூரணமாக இணங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், காட்டு யானைகள் தொடர்பில் வேறு விதமான அணுகுமுறைகள் பின்பற்றப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார். இலங்கையில் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையில் யானைகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
யானைகளுக்கான தடுப்ப வேலிகளை பலப்படுத்த வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். சூழலியலாளர்களின் கருத்துக்களை மட்டும் கேட்டால் இந்த நாட்டில் விவசாயத்தை மேற்கொள்ளவோ அல்லது பொதுமக்களை பாதுகாக்கவோ முடியாது போகும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க கொழும்பில் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri
