எங்களுக்கு எந்த சவாலும் இல்லை! மகிந்தானந்த அளுத்கமகே
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் எவ்வித சவால்களும் இல்லை என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்மககே தெரிவித்துள்ளார்.
கண்டி நாவலப்பிட்டியில் நேற்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தேர்தல் முடிவுகளை கேட்கும் யார் பலமிக்கவர்கள் என்பதை அறியலாம்

எங்களுக்கு எந்த சவாலும் இல்லை. நாங்கள் சேவைகளை செய்த அரசாங்கம். போரை முடிவுக்கு கொண்டு வந்த அரசாங்கம். கொரோனா தொற்று நோயை முடிவுக்கு கொண்டு வந்த அரசாங்கம். நாங்கள் சேவைகளை செய்த அரசாங்கம், வெறும் பேச்சுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அரசாங்கம் அல்ல.
தேர்தல் ஒன்றின் போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பலவீனமான கட்சி என்று எவருக்கும் கூற முடியும். தேர்தல் முடிவுகளை கேட்கும் போது யார் பலமிக்கவர்கள், யார் பலவீனமானவர்கள் என்பதை அறிந்துக்கொள்ள முடியும் எனவும் மகிந்தனந்த அளுத்கமகே மேலும் தெரிவித்துள்ளார்.

எம்பாப்பேவின் பெனால்டி கோலால் தப்பிப் பிழைத்த பிரான்ஸ்: கடைசி வரை பயம் காட்டிய பராகுவே News Lankasri
125 நாட்கள் சிதையாமல் பாதுகாக்கப்பட்ட கமேனியின் உடல்! ஆச்சரியப்படுத்தும் எம்பாமிங் பின்னணி என்ன? Manithan