நாங்கள் பணம் தருகின்றோம் கையளித்த பிள்ளைகளை கண்டுபிடித்து தாருங்கள்: காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சங்கம்
அரசிற்கு ஒரு இலட்சம் இல்லை பத்து மடங்கு பணத்தினை நாங்கள் தருகின்றோம், கையளித்த உறவுகளை மீட்டுத்தாருங்கள் என முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத் தலைவி ம.ஈஸ்வரி மற்றும் செயலாளர் பி.றஞ்சனா ஆகியோர் இன்றைய ஊடக சந்திப்பிலேயே இதனை தெரிவித்துள்ளனர்.
காணாமல் போனோரின் குடும்பங்களை மீள் வாழ்வளிப்பதற்காக ஒருமுறை மாத்திரம் செலுத்தப்படும் கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசின் இந்த அறிவிற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எதிர்ப்பினை தெரிவித்துள்ளார்கள்.
அவர்கள் இதன்போது மேலும் தெரிவிக்கையில்,
2016ஆம் ஆண்டு 17ஆம் இலக்க காணாமல் போனோர் பற்றிய அலுவலக சட்டத்தின் மூலம் காணாமல் போனோர் தொடர்பாகச் சரியான விசாரணைகளை நடாத்திய பின்னர் இறப்புச் சான்றிதழ் அல்லது காணக்கிடைக்கவில்லை என்ற சான்றிதழை வழங்குவதற்காகப் பதிவாளர் நாயகத்திற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தால் கண்டறியப்பட்ட விடயங்களின் அடிப்படையில் பதிவாளர் நாயகத்தால் வழங்கப்பட்டுக் காணக்கிடைக்கவில்லை எனும் சான்றிதழைப் பெற்றுள்ள காணாமல் போன நபரின் நெருங்கிய உறவினருக்கு குடும்ப மீள் வாழ்வுக்காக ஒருமுறை மாத்திரம் செலுத்தப்படும் 100,000 ரூபாவை செலுத்துவதற்காக நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
எங்கள் உயிரின் பெறுமதி ஒரு இலட்சம் என்று சொல்லி இவர்கள் தீர்மானிப்பதற்கு இவர்கள் யார்? எங்களின் உறவுகளின் பெறுமதியினை நன்கு புரிந்து வைத்திருப்பவர்கள் ஒரு இலட்சம் வேண்டாம் நாங்கள் இதனைவிட பத்து மடங்க அல்லது இருபது மடங்கு பணத்தினை தருகின்றோம்.
நாங்கள் அவர்களிடம் கையளித்த உறவுகளை அவர்கள்
தேடிக்கண்டறிந்து எங்களிடம் கையளிக்கட்டும் அவர்கள் தேடிக்கண்டறிந்து
எங்களிடம் கையளிக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும்
அரசாங்கத்தின் காணாமல் போனோர் அலுவலகம் ஊடாக அவர்கள் வழங்கப்படும் நஷ்டஈடு ஒரு
இலட்சத்தினையோ மரண சான்றிதழையோ, காணாமலாக்கப்படவில்லை என்ற சான்றிதழையோ நாங்கள்
பெற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. உறவுகளுக்குச் சரியான நீதி கிடைக்கும் வரை எங்கள்
போராட்டம் தொடரும்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.





தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை முழுமையாக நிறுத்திய ஜேர்மனி - அரசியல் மாற்றத்திற்கு அடையாளம் News Lankasri
