ஊடகவியலாளர் டேனிஷ் சித்திக் கொலை விவகாரம்! தாலிபான் படையின் அதிரடி அறிவிப்பு
டேனிஷ் சித்திக்கை நாங்கள் கொலை செய்யவில்லை, ஆப்கானிஸ்தானுக்கு எந்த செய்தியாளர் செய்தி சேகரிக்க வந்தாலும் அவர்கள் எங்களை தான் அணுக வேண்டும் என்று தாலிபான் படை தெரிவித்துள்ளது.
ஆப்கான் படைகளுக்கும் தாலிபான்களுக்கும் இடையில் நடந்த மோதலில் கடந்த வாரம் இந்திய செய்தியாளர் டேனிஷ் சித்திக் கொல்லப்பட்டார். உலக நாடுகள் இடையே இந்த மரணம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் டேனிஷ் சித்திக் மரணம் குறித்தும், தாலிபான் படைகள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிப்பது குறித்தும், தாலிபான் செய்தி தொடர்பாளர் பேட்டி அளித்துள்ளார்.
அதில், நாங்கள் ஆப்கானிஸ்தானின் 85 சதவிகித பகுதிகளை கைப்பற்றிவிட்டோம். மீதம் இருக்கும் 15 சதவிகிதத்தையும் நாங்கள் விரைவில் கைப்பற்றிவிடுவோம்.
பாகிஸ்தான் எங்களுக்கு உதவுவதாக வெளியாகும் செய்திகள் உண்மை இல்லை. நாங்கள் தனியாகவே ஆப்கான் எதிரி படைகளுக்கு எதிராக போராடி வருகிறோம்.எங்களுக்கு யாரும் உதவி செய்யவில்லை. எங்களுக்கு எதிரான தவறான தகவல்களை பரப்புகிறார்கள்.
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிராக நாங்கள் கட்டுப்பாடுகளை விதிப்பதாக தவறாக பரப்பரப்படுகின்றது.
தாலிபான்கள் பெண்களுக்கு எதிராக எந்த கட்டுப்பாட்டையும் விதிக்கவில்லை. பெண்களுக்கு உரித்தான உரிமைகளை தாலிபான்கள் கண்டிப்பாக வழங்கும். இதில் நிறைய வதந்தி பரபரப்படுகின்றது.
டேனிஷ் சித்திக் மரணத்திற்கு தாலிபான்கள் இரங்கல் தெரிவித்தது. நாங்கள் அவரை கொலை செய்யவில்லை. அவர் எங்களின் எதிரி படைகளுடன் இணைந்து செய்து சேகரித்தார்.
ஆப்கானிஸ்தானுக்கு எந்த செய்தியாளர் செய்தி சேகரிக்க வந்தாலும் அவர்கள் எங்களுடன்தான் பேச வேண்டும். எங்களைத்தான் அணுக வேண்டும்.
எங்கள் நாட்டின் செய்தியாளர்களை எங்களைத்தான் அணுகுகிறீர்கள். ஆப்கானிஸ்தானின் கட்டுமானங்கள் எதையும் நாங்கள் இடிக்கவில்லை.
எதிரிகளின் கேம்ப்கள், படைத்தளங்களை மட்டுமே நாங்கள் தாக்கி அழிக்கிறோம். எங்களுக்கு எதிரான தவறான வதந்திகள் தொடர்பு பரப்பப்படுவதை ஏற்க முடியாது என்று தாலிபான்கள் தரப்பு தெரிவித்துள்ளது.