நாங்கள் ஆயுதம் ஏந்திப் போராட வரவில்லை: செல்வராணி (video)
தற்போது நாம் தேடிக் கொண்டிருப்பது எமது உறவுகளைத்தான். நாங்கள் ஆயுதம் ஏந்திப் போராட வரவில்லை என அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத் தலைவி தங்கராசா செல்வராணி தெரிவித்துள்ளார்.
வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணியில் அம்பாறை மாவட்டத்திலிருந்து வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத் தலைவியின் தலைமையில் பேருந்துகளில் பொதுமக்கள் தமது காணாமலாக்கப்பட்ட உறவினர்களின் புகைப்படங்களைத் தாங்கியவண்ணம், நேற்று(07.02.2023) நண்பகல் மட்டக்களப்பை வந்தடைந்தனர்.
எங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது
இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,“தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதற்காக வேண்டியும், சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக பல்கலைக்கழக மாணவர்கள் வடக்கிலிருந்து கிழக்கிற்கு வந்தார்கள்.
இதற்கு வலுச் சேர்ப்பதற்காக அம்பாறை மாவட்டத்திலிருந்து 500 இற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டோம்.
எமது போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னரே திருக்கோவிலில் வைத்து எமது உறவுகள் தங்கவேலாயுதபுரத்திற்குச் செல்வதற்குப் புறப்பட்ட வேளை இருவர் முகமூடிகளை அணிந்து கொண்டு பேருந்தின் கண்ணாடிகளை உடைத்துவிட்டுச் சென்றனர்.
இதனால் சாரதி நூலிடையில் உயிர் பிழைத்துள்ளார்.
எமக்கான நீதி
எனக்கு திங்கட்கிழமை(06.02.2023) நள்ளிரவு 12 மணி வரையில் 6 நீதிமன்ற உத்தரவுகள் கிடைத்தது.
நேற்று(07) நீதிமன்றிற்குச் சென்றுதான் இப்போராட்டத்திற்குச் சமூகம் கொடுத்தேன்.
புலனாய்வாளர்கள் எம்மை மிகவும் துன்பப்படுத்துகின்றார்கள். நாங்கள் தேடிக்கொண்டிருப்பது எங்கள் உறவுகளைத்தான் நாங்கள் ஆயுதம் ஏந்திப் போராட வரவில்லை. தடிகளைக் கொண்டு வரவில்லை, எங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதையே கேட்டுவந்தோம்.
170 இற்கு மேற்பட்ட எமது உறவுகளை இழந்து இப்போராட்டத்தில் ஈடுபட்டோம். தற்போதுள்ள உறவுகளை நாம் காப்பாற்ற வேண்டும். எமக்கான நீதி இந்த போராட்டத் தொடரில் வரவேண்டும்.”என தெரிவித்துள்ளார்.











புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
