நினைவுகளை நாமே அழிக்கின்றோம்! ஐங்கரநேசன் ஆதங்கம்

Jaffna Tamil National People's Front Sri Lanka Northern Province of Sri Lanka
By Theepan Sep 30, 2022 10:31 AM GMT
Report

திலீபனின் தூபியை அன்று படையினர் அழித்தார்கள். அவர்களால் நம் மனங்களிலிருந்து நினைவுகளை அழிக்க முடியவில்லை. ஆனால், எஞ்சிய நினைவுகளை இன்று நாமே அழிக்கிறோம் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் குழப்பங்கள் தொடர்பில் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிடுவதன் மூலம் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் செயற்பாடுகள்

அவர் மேலும் கூறுகையில், “திலீபனின் நினைவேந்தலில் ஏற்பட்ட குழப்பங்களும் அதையொட்டிய ஊடக சந்திப்புகளும் பேரினவாதிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ஆனால், தமிழ் மக்கள் இவற்றால் வெட்கித் தலை குனிந்துள்ளார்கள்.

நினைவுகளை நாமே அழிக்கின்றோம்! ஐங்கரநேசன் ஆதங்கம் | We Destroy Memories Ourselves Aingaranesan

திலீபனின் தூபியை அன்று படையினர் அழித்தார்கள். அவர்களால் தங்கள் மனங்களிலிருந்து நினைவுகளை அழிக்க முடியவில்லை. ஆனால், எஞ்சிய நினைவுகளை இன்று நாமே அழிக்கின்றோம்.

தமிழ்த் தேசிய விடுதலை போராட்டத்தில் தங்கள் இன்னுயிர்களை ஈந்தவர்கள் எந்நாளும் நினைவுகூரப்பட வேண்டியவர்கள். இது வெறுமனே நினைவுகளை மனத்திரையில் மீட்கும் சடங்குகள் அல்ல. மாறாக, அவர்களின் போராட்ட நியாயங்களையும் போராட்டத் தியாகங்களையும் அடுத்த தலைமுறைகளுக்கு கடத்துகின்ற உயிர்ப்பான அரசியல் செயற்பாடுகளாகும்.

அரசியல் காரணங்களுக்காக போராடி மடிந்தவர்களின் நினைவேந்தல்களில் அரசியல் நீக்கம் செய்வது அவர்களின் போராட்ட நியாயங்களைக் குழிதோண்டிப் புதைப்பதாகும். இத்தகைய நினைவேந்தல்களில் இனத்துவ அரசியலைத் தாண்டி கட்சி அரசியல் மேலோங்குவது போராட்டத் தியாகங்களை சூறையாடுவதாகும்.

ஆனால், துரதிர்ஷ்டமாக தமிழ்த்தேசிய அரசியல் களத்தில் இன்று இவையே அதிகம் நிகழ்ந்தேறுகின்றன.

வேதனைக் குரல்

நினைவுகளை நாமே அழிக்கின்றோம்! ஐங்கரநேசன் ஆதங்கம் | We Destroy Memories Ourselves Aingaranesan

நினைவேந்தல் குழப்பங்களுக்கு யார் காரணம் என்ற கேள்விக்கு அப்பால் இவை நிகழ்ந்திருக்கவே கூடாது என்பதுதான் ஒட்டுமொத்த தமிழ் மக்களினதும் வேதனைக் குரலாக உள்ளது.

கட்சி வேறுபாடுகள் தாண்டி பேரினவாதிகள் ஒன்றுபட்டு நினைவேந்தியவர்களை கைதுசெய்யுமாறு கொக்கரிக்கிறார்கள். ஆனால், நாமோ பொது நினைவேந்தல்களில் கூட ஒன்றுபட முடியாமல் தமிழ்த் தேசியத்தை மழுங்கடித்து வருகிறோம்" என குறிப்பிட்டுள்ளார். 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US