எதிர் பிரசாரங்களை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்! - ஐநா கூட்டத்தில் ஜோ பைடன் பேச்சு
பிளவுபட்ட உலகில் மீண்டும் ஒரு புதிய பனிப்போரை உருவாக்க நாங்கள் முயற்சிக்கவில்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபை பொது கூட்டத்தில் கலந்தகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். ஐக்கிய நாடுகளை சபையின் 76வது கூட்ட தொடர் நியூயோர்க்கில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“நமது பாதுகாப்பு, வளர்ச்சி, சுதந்திரம் ஆகியவை ஒன்றோடு ஒன்று இணைந்தவை. இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் நாம் இணைந்து செயல்பட வேண்டும். நாம் இன்று பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறோம்.
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகால பிரச்சினையை நாம் முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம். இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவந்துள்ள நாம் அங்கு வெளியுறவுக் கொள்கை என்ற கதவுகளை திறந்துள்ளோம்.
எத்தனை சவால்களை நாங்கள் சந்தித்த போதும் அமெரிக்கா சிறப்பானவற்றை வெளிப்படுத்தும். இதனிடையே, ஆயுதங்கள் கொரோனா வைரசை வீழ்த்தாது. ஒருங்கிணைந்த அறிவியல் மற்றும் அரசியல் சக்திகளால் கொரோனாவை வீழ்த்தலாம்.
நாம் இப்போதே செயல்பட வேண்டும். சிகிச்சைக்கான வசதிகளை விரிவுபடுத்தி உலகில் உள்ள உயிர்களைக் காக்க வேண்டும். எதிர்காலத்தில் உலக சுகாதார பாதுகாப்புக்கான நிதிக்காக புதிய நடைமுறைகளை நாம் உருவாக்க வேண்டும்.
அமெரிக்க இராணுவ சக்தி என்பது எங்கள் முதல் ஆயுதமல்ல. கடைசி ஆயுதம் ஆகும். பிளவுபட்ட உலகில் மீண்டும் ஒரு புதிய பனிப்போரை உருவாக்க நாங்கள் முயற்சிக்கவில்லை. அமைதியைப் பின்பற்றும் எந்த நாட்டுடனும் இணைந்து பணியாற்ற அமெரிக்கா தயாராக உள்ளது.
நமது தோல்விகளால் நாம் அனைவரும் விளைவுகளை சந்தித்துள்ளோம். 20 ஆண்டுகளுக்கு முன்னர் 9/11 தாக்குதல் நடந்தபோது இருந்த அதே அமெரிக்கா தற்போது இல்லை.
இன்று நாம் சிறந்த ஆயுதங்கள் மற்றும் அதிக திறனுடன் உள்ளோம். எதிர் பிரசாரங்களை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என தெரிவித்தார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

நாளுக்கு நாள் நிகழும் மாற்றங்கள்! இலங்கையை ஆட்டிப்படைக்கும் அதிகாரம் 3 மணி நேரம் முன்

பிரபல நகைச்சுவை நடிகர் பிளாக் பாண்டிக்கு இலங்கையில் இருந்து வந்த முக்கிய தகவல்! ஈழமக்கள் சார்பில் நன்றி News Lankasri

பிரித்தானிய ஏரி ஒன்றில் மர்ம உயிரினம்... சிறுபிள்ளைகளுக்கும் செல்லப்பிராணிகளுக்கும் எச்சரிக்கை News Lankasri

வெளிநாட்டு பெண்ணை 11 ஆண்டுகளாக காதலித்த தமிழர்! உறுதியாக இருந்த ஜோடி... இறுதியில் சுபம் News Lankasri
