கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் திடீரென நீர் விநியோகம் துண்டிப்பு - வெளியான அறிவிப்பு
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் பல பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
களனி கங்கையிலிருந்து நீரைப் பெற்றுக்கொள்ளும் Intake பகுதிக்கு அருகில் நீரின் தரத்தைப் பாதித்த அவசர நிலைமை காரணமாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் (DMC) அறிவித்தலுக்கு அமைவாக இவ்வாறு நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
அறிவிப்பு
பாதுகாப்பு காரணங்களுக்க, அம்பத்தலை மற்றும் களனி தென்கரை நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கான நீர் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

நீர் விநியோகத்தை சாதாரண நிலைக்குக் கொண்டுவருவது தொடர்பில் எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலைமையினால் ஏற்படும் அசௌகரியங்களுக்கு நுகர்வோரிடம் வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்வதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபை அறிவித்துள்ளது.