நீர் வெட்டு தொடர்பில் வெளியான தகவல்
சில பிரதேசங்களுக்கு 10 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாளை மறுதினம் (25.03.2023) காலை 11 மணி முதல் 9 மணிவரை நீர் வெட்டு நடைமுறையில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதேசங்கள்
இதற்கமைய கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸ, கோட்டை, கடுவெல மாநகர சபை பகுதி, மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ மாநகர சபை பகுதி, கொட்டிகாவத்தை முல்லேரிய பிரதேச சபை பகுதி, இரத்மலானை மற்றும் கட்டுபெத்த ஆகிய பகுதிகளில் 10 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.