கொழும்பு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு
நாட்டில் சில பகுதிகளில் நாளை 7 1/2 மணிநேரம் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இன்று (19) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர் விநியோகம் தடை
அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படும் என அந்த சபை அறிவித்துள்ளது.

இந்த நீர் விநியோக தடையானது நாளை சனிக்கிழமை (20) காலை 8.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை 7 1/2 மணி நேரம் நீர் விநியோகம் தடைபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நீர் விநியோக தடையானது கொழும்பு 1 முதல் 15 வரையான பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீர் விநியோகம் தடைப்படுவதால் நுகர்வோருக்கு ஏற்படும் சிரமத்திற்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை வருத்தம் வெளியிட்டிருப்பதுடன், தண்ணீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் முதல் நாளில் மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள விஜய்யின் ஜனநாயகன்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
விருச்சிகத்தில் சந்திரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்! Manithan
ஆயுதப்படைகள் எப்போதும் தயார்., ஈரான் விடுத்த எச்சரிக்கைக்கு பிரித்தானியா கொடுத்த பதில் News Lankasri