துறைமுக சிற்றுண்டிச்சாலையில் இடம்பெறும் பாரியளவிலான வீண்விரயம் அம்பலம்
கொழும்புத் துறைமுக சிற்றுண்டிச்சாலையில் நாளாந்தம் பாரியளவிலான எரிபொருள் வீண்விரயம் நடைபெறுவதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் கண்டறியப்பட்டுள்ளது.
துறைமுகத்தை பார்வையிட்ட அமைச்சர்
கொழும்புத்துறைமுகத்தின் சிற்றுண்டிச்சாலை நேற்று துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் திடீரென்று பார்வையிடப்பட்டுள்ளது.

அதன்போது நாளாந்த உணவில் மரமுந்திரிகை சேர்த்துக் கொள்ளப்படுவதற்காக பாரிய தொகையொன்று தினமும் செலவிடப்படுவதை அவரால் கண்டறியப்பட்டுள்ளது.
சிற்றுண்டிச்சாலையில் உணவு தயாரிக்க செலவிடப்படும் தொகையில் சரி பாதி அளவில் மரமுந்திரிகை விதைகளுக்கு செலவிடப்படுவதாக தெரியவந்ததையடுத்து மரமுந்திரிகைக்குப் பதில் வேறொரு பண்டத்தை உணவில் சேர்த்துக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சரால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

வீணடிக்கப்படும் எரிபொருள்
அத்துடன் சுமார் 45 வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட துறைமுக சிற்றுண்டிச்சாலையில் மிகவும் பழைய பொறிமுறையில் உணவு தயாரிக்கப்படுவதன் காரணமாக பாரியளவான எரிவாயு நாளாந்தம் வீணடிக்கப்படுவதையும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சிற்றுண்டிச்சாலையை நவீனமயப்படுத்தவும், எரிவாயு பாவனையை மட்டுப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அமைச்சரால் உத்தரவிடப்பட்டுள்ளது.
சனி–சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri
நடிகர் ஜிபி முத்து மீது தாக்குதல்.. வீட்டின் முன் மாந்திரீக பூஜை, தட்டி கேட்டதால் தாக்குதல் Cineulagam