காணாமல்போன சிறுமி பலி கொடுக்கப்பட்டாரா..! புத்தளத்தில் மக்கள் குழம்பியதால் பதற்றம் (Video)
புத்தளம் - மதுரங்குளிய பிரதேசத்தில் சிறுமியொருவர் பலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் மக்கள் குழம்பியதால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்றைய தினம் (05.06.2023) பதிவாகியிருந்ததாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
புதையல் இருப்பதாக கூறப்படும் காணிப்பகுதியை பிரதேசவாசிகள் அவதானித்த போது, காணியில் வெட்டப்பட்ட குழியில் சிறுமியொருவருடையது என கருதக்கூடிய சில ஆடைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
புத்தளம், மதுரங்குளி கின்னவத்தை பிரதேசத்தில் உள்ள தனியார் காணி ஒன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காணாமல்போன சிறுமி
அண்மைய நாட்களில் இந்த காணிக்கு அருகில் வசித்து வந்த வயோதிபப் பெண்ணொருவரும், சிறுமியொருவரும் காணாமல் போயுள்ளதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையிலேயே குறித்த சிறுமி பலி கொடுக்கப்பட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதுடன், இதனிடையே, புதையல் தோண்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் குழியில் நிரம்பியிருந்த நீரை அகற்றி அப்பகுதியில் தேடுதல் நடத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வீடியோ - அஸார்
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan