இலங்கையில் மாறுபாடு அடைந்த மற்றுமொரு கோவிட் வைரஸ் பரவலாம் என எச்சரிக்கை
தென்னாபிரிக்காவில் பரவும் புதிய மாறுபாடு அடைந்த கோவிட் வைரஸ் இலங்கையிலும் தோற்றம் பெறும் ஆபத்துக்கள் உள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய மரபணு தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவது ஆபத்தான நிலைமையாகும். இந்த நிலைமையில் மக்களின் பாதுகாப்பிற்காக பல்வேறு தீர்மானங்கள் எடுப்பதற்கு நேரிடும் என சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹன தெரிவித்துள்ளார்.
அதற்கமைய திருமணங்கள் மற்றும் மரண நிகழ்வுகளை தவிர வேறு எந்த நிகழ்விலும் மக்கள் கலந்துகொள்வதற்கு அனுமதி வழங்கப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார். மீளவும் தனிமைப்படுத்தல் சட்டங்களை அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வேறு நிகழ்வுகள் நடத்துவதற்கு அனுமதி கோரி வர வேண்டாம் என நாட்டு மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம். அனுமதிகளை மீறி மக்கள் ஒன்று கூடினால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் கடுமையாக இருக்கும். நிகழ்வில் கலந்துகொள்பவர்களுக்கும் ஏற்பாடு செய்பவர்களுக்கும் தண்டனை வழங்கப்படும்.
மேலும் குற்றச்சாட்டுகளில் சிக்குபவர்களுக்கு 6 மாத சிறைத்தண்டனை அல்லது 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 16 மணி நேரம் முன்
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam