வெளிநாட்டு வேலைவாய்ப்பு குறித்த சமூக ஊடக பிரச்சாரங்கள் தொடர்பில் எச்சரிக்கை
வெளிநாட்டு வேலைவாய்ப்பு குறித்த சமூக ஊடக அமைப்புக்களின் ஊடான பிரச்சாரங்கள் விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் தொடர்பில் சில சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டு வரும் போலி விளம்பரங்களுக்கு யாரும் சிக்கிவிட வேண்டாம் என வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் கோரியுள்ளது.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு குறித்து பல்வேறு போலி விளம்பரங்கள் ஊடாக மோசடிகள் இடம்பெற்று வருவதாக குற்றவியல் விசாரணை பிரிவிற்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கும் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுமதிபத்திரம் பெற்றுக்கொண்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் பத்திரிகைகள், தொலைக்காட்சி மற்றும் வானொலி மூலம் விளம்பரம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
எனினும் சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்வதற்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் அனுமதி வழங்குவதில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் தொடர்பில் விளம்பரம் செய்வது வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றச் செயல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களின் ஊடாக செய்யப்படும் பிரச்சாரங்கள் குறித்து மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டுமென வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கோரியுள்ளது.





Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam
