கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் பயணிகளுக்கு எச்சரிக்கை
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் பயணிகளுக்காக நிறுத்தப்படும் உணவகங்கள்தொடர்பில் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.
தூர இடங்களுக்கான சேவையில் ஈடுபடுத்தப்படும் தனியார் பஸ் வண்டிகள் உணவுக்காக நிறுத்தப்படும் ஹோட்டல்களில் தரத்தில் குறைந்த 57 ஹோட்டல்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இத்தகைய ஹோட்டல்களின் தரத்தையும் உணவுப்பொருட்களின் விலை மட்டங்களையும் சோதனையிடும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டா தெரிவித்தார்.
ஐந்து ஹோட்டல்கள்
இந்த நடவடிக்கையில் பொது சுகாதார உத்தியோகத்தர்களும் ஈடுபட்டுள்ளனர்.

கொழும்பு - யாழ்ப்பாணம் மார்க்கத்தில் குறைந்த தராதரங்களுடன் இயங்கிய ஐந்து ஹோட்டல்கள் இனங்காணப்பட்டன.
இத்தகைய ஹோட்டல்களில் பஸ் வண்டிகளை நிறுத்த வேண்டாம் என சாரதிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
நாளாந்தம் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கும், யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கும் பல பஸ் சேவைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan