சமூக ஊடங்கள் மூலம் ஏமாற்றப்படும் இலங்கையர்கள் - வெளியான அதிர்ச்சித் தகவல்
யூடியூப் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களை பயன்படுத்தி வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி மேற்கொள்ளப்படுவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டுபாயில் பணியாற்றிய ஒரு நபர் அங்கு வேலை வழங்குவதாக கூறி இந்த மோசடியை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
டுபாயில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்களிடமிருந்து வீடியோ தகவல்களைப் பெற்று, அவர்கள் இந்த குழுவின் மூலம் வேலைக்காக வந்ததாக மோசடியான முறையில், யூடியூப் மற்றும் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளனர்.
பண மோசடி
குறித்த சமூக ஊடகங்களில் இதுபோன்ற தகவல்களை பார்த்து ஏமாறும் மக்களிடமிருந்து பணத்தை மோசடி செய்து மேற்கொள்ளப்படும் இந்த மோசடி குறித்து இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிறப்பு புலனாய்வுப் பிரிவு மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும் இந்த மோசடியில் சிக்கியவர்களும் பணியகத்திற்கு முறைப்பாடுகளை சமர்ப்பித்துள்ளனர். இதுபோன்ற தகவல்களை சமூக ஊடகங்களில் வெளியிட்ட பின்னர், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிறப்பு புலனாய்வுப் பிரிவு, மோசடி குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
மோசடியில் சிக்கும் மக்களிடமிருந்து பணத்தை மோசடி செய்து மேற்கொள்ளப்படுகிறது, மேலும் இந்த மோசடிக்குள்ளானவர்களும் பணியகத்திற்கு முறைப்பாடு சமர்ப்பித்துள்ளனர்.
சமூக ஊடகங்கள்
இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டு, இது தொடர்பாக மேலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
புலம்பெயர்ந்த சமூகத்தை தவறாக வழிநடத்தும் சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் இதுபோன்ற பிரசாரங்களுக்கு பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்று பணியகம் கேட்டுக்கொள்கிறது.
மேலும், இது போன்ற மோசடியானவர்கள் தொடர்பான தகவல்களை பணியகத்திற்கு தெரிவிக்குமாறும் பணியகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்தத் தகவலை 1989 என்ற தொலைபேசி எண்ணுக்கோ அல்லது 0112864123 என்ற சிறப்பு புலனாய்வுப் பிரிவிற்கோ தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பங்கர் பஸ்டராக உருவெடுக்கும் இந்தியாவின் அக்னி ஏவுகணை - சீனா, பாகிஸ்தானுக்கு கடும் அச்சுறுத்தல் News Lankasri

15 நாட்களாக நிறுத்தப்பட்டிருக்கும் F-35B பிரித்தானிய போர் விமானம்: அகற்றப்பட்ட தரவுகள் News Lankasri
