வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட அறிவிப்பு
இந்த ஆண்டில் 340,000 இலங்கையர்களை வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக அனுப்ப எதிர்பார்ப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களுக்கு கல்வி கற்பிப்பதற்கான தொடர் நிகழ்ச்சித் திட்டங்களின் முதல் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றும் போது அதன் தலைவர் கோசல விக்ரமசிங்க இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மூலம் 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர் பணம் அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
314,000 இலங்கையர்கள்
2024 ஆம் ஆண்டில், சுமார் 314,000 இலங்கையர்கள் வேலைக்காக வெளிநாடுகளுக்குச் சென்றனர்.
அதன்படி, 2024 ஆம் ஆண்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர் பணம் அனுப்புதலில் 6.51 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறப்பட்டதாக கூறப்படுகிறது.
2024 ஆம் ஆண்டில் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்ற தொழிலாளர்களில் 65 சதவிகித பேர் தொழில்முறை நடவடிக்கைகளுக்காக சென்றதாக தெரிவிக்கப்படுறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)