நாட்டின் பல பகுதிகளுக்கு நாளைய தினம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் நாளையதினம் அதிக வெப்பநிலை உணரப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இதன்படி, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இவ்வாறு வெப்பநிலை அதிகரித்து காணப்படும்.
அதிக வெப்பநிலை
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசங்களில், உடலில் உணரப்படும் வெப்பநிலையை விடவும் அவதானத்துக்குரிய அளவில் வெப்பநிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதன்படி, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வெப்பச் சுட்டெண் 39 முதல் 45இற்கு இடைப்பட்ட அளவில் நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.