ஒன்லைன் வங்கி செயலி பயன்படுத்தும் மக்களுக்கு விசேட எச்சரிக்கை
இலங்கையில் பிரபலமான தனியார் வங்கியாக காட்டிக்கொண்டு, ஒன்லைன் வங்கி செயலி அல்லது ஒன்லைன் வங்கிக் கணக்கு விண்ணப்பத்தை புதுப்பிப்பதாக மோசடி இடம்பெறுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஒன்லைன் வங்கிக் கணக்கு விண்ணப்பத்தை மாலை 04 மணிக்கு முன்னர் புதுப்பிக்க வேண்டும் எனவும், இல்லையெனில் 3,800 ரூபா தொகையை செலுத்த நேரிடும் எனவும் மோசடியாளர்கள் அறிவுறுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.
செயலியின் பயனர்களின் பெயர் மற்றும் கடவுச்சொல்லை புதுப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட கணக்கு வைத்திருப்பவர்களிடம் மோசடி செய்பவர்கள் கேட்டுள்ளனர்.
வங்கி செயலி
இணைய வங்கி சேவைகளை பயன்படுத்துவதற்கு மக்கள் ஊக்குவிக்கப்படுவதால், மோசடிகள் பற்றிய செய்திகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
மேலும், கடந்த சில நாட்களில் ஒன்லைன் நிதி மோசடியில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பண மோசடி
இணைய வங்கிப் பாவனையாளர்கள் எந்தவொரு தரப்பினருக்கும் பயனர் பெயர், கடவுச்சொல் மற்றும் OTP குறியீட்டை வழங்க வேண்டாம் என இலங்கை கணினி அவசர பதில் மன்றம் கோரியுள்ளது.
அதேபோன்று இவ்வாறான மோசடி செயலில் சிக்கினால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.





தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

பிரித்தானியாவின் பிரபலமான ஐஸ்கிரீம் வியாபாரிக்கு 8 முறை கத்திக்குத்து: இரண்டு பேர் கைது! News Lankasri
