முகக் கவசம் அணியாமை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
மத வழிப்பாட்டு ஸ்தலங்கள் மற்றும் சுற்றுலா இடங்களில் முகக் கவசம் அணியாமல் பலர் பயணிப்பதாக சுகாதார சேவை பணிப்பாளர் அசேல குணவர்தன (Asela Gunawardana) தெரிவித்துள்ளார்.
முகக் கவசம் அணியாமல் பயணிப்பது மிகவும் ஆபத்தான நிலைமை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலைமை தொடர்ந்து நீடித்தால் எதிர்வரும் நாட்கள் மிகவும் அவதானமிக்கதென சுகாதார பணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொவிட் நிலைமை ஓரளவு கட்டுப்பாட்டிற்கு வந்துள்ளது. எனினும் அதனை தொடர்ந்து நீடிப்பதற்கு மக்கள் சுகாதார கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.