சீரற்ற காலநிலையால் 7 பேர் உயிரிழப்பு
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 13 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், நாட்டின் 18 மாவட்டங்களில் காலநிலையால் மாற்றத்தால் 12 ஆயிரத்து 197 குடும்பங்களைச் சேர்ந்த 45 ஆயிரத்து 344 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இதில் 12 வீடுகள் முழுமையாகவும், 2 ஆயிரத்து 797 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன.
வான்கதவுகள் திறப்பு
இதேவேளை தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 6 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. எனவே அதன் தாழ்நிலப் பகுதிகளில் வசிப்போர் வெள்ள அபாயம் குறித்து மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், மரங்கள் முறிந்து வீழ்ந்தமையினால் ஹப்புத்தளை – தியத்தலாவை வீதி தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளது.
இதனால் ஹப்புத்தளை – பண்டாரவளை வீதியைப் பயன்படுத்துமாறு வாகன சாரதிகளை பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
நல்ல வசூல் வேட்டை செய்யும் விஷ்ணு விஷாலின் ஆர்யன் பட வசூல்... 5 நாளில் செய்துள்ள கலெக்ஷன்... Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri