சீரற்ற காலநிலையால் 7 பேர் உயிரிழப்பு
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 13 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், நாட்டின் 18 மாவட்டங்களில் காலநிலையால் மாற்றத்தால் 12 ஆயிரத்து 197 குடும்பங்களைச் சேர்ந்த 45 ஆயிரத்து 344 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இதில் 12 வீடுகள் முழுமையாகவும், 2 ஆயிரத்து 797 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன.
வான்கதவுகள் திறப்பு
இதேவேளை தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 6 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. எனவே அதன் தாழ்நிலப் பகுதிகளில் வசிப்போர் வெள்ள அபாயம் குறித்து மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், மரங்கள் முறிந்து வீழ்ந்தமையினால் ஹப்புத்தளை – தியத்தலாவை வீதி தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளது.
இதனால் ஹப்புத்தளை – பண்டாரவளை வீதியைப் பயன்படுத்துமாறு வாகன சாரதிகளை பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 3 நாட்கள் முன்

சின்ன மருமகள் சீரியலில் முக்கிய நபர் மரணம்.. கதறி அழும் தமிழ் செல்வி! அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri
