நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை - 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
சீரற்ற காலநிலை காரணமாக 07 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் நேற்று (24) இரவு 8.00 மணி முதல் இன்று இரவு 8.00 மணி வரை 24 மணிநேர மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அதற்கமைய மாத்தளை, கண்டி, குருநாகல் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு இரண்டாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கையும் கொழும்பு, களுத்துறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு முதல் கட்ட மண்சரிவு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி முதல் நேற்று வரை நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக 18 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும் நாட்டின் தென்கிழக்கில் வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி தற்போது நாட்டின் கிழக்கு பகுதியில் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 14 மணி நேரம் முன்
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan