நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை - 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
சீரற்ற காலநிலை காரணமாக 07 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் நேற்று (24) இரவு 8.00 மணி முதல் இன்று இரவு 8.00 மணி வரை 24 மணிநேர மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அதற்கமைய மாத்தளை, கண்டி, குருநாகல் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு இரண்டாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கையும் கொழும்பு, களுத்துறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு முதல் கட்ட மண்சரிவு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி முதல் நேற்று வரை நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக 18 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும் நாட்டின் தென்கிழக்கில் வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி தற்போது நாட்டின் கிழக்கு பகுதியில் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தமிழின படுகொலையின் கொடூரம்..! முள்ளிவாய்க்கால் மண் தொடர்பில் முதல்வர் விஜய் வெளியிட்ட முக்கிய செய்தி
கொழும்பில் ஏற்பட்ட அமைதியின்மை! முன்னாள் அமைச்சர் விமல் உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
தமிழகத்தில் விடுதலைப் புலிகளை பற்றி சர்ச்சைக்குரிய பேச்சு.. நாடு திரும்பியதும் கைது! - அர்ச்சுனா எம்பி பகிரங்கம்
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam