மக்கள் கொந்தளிப்பு திசை மாறும் ஆபத்து: அரசாங்கத்திற்கு பகிரங்க எச்சரிக்கை (Video)
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக எதிர்வரும் காலங்களில் போராட்டங்கள் அதிகரிப்பதால் மக்கள் கொந்தளிப்பு திசை மாறும் ஆபத்து காணப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் வரும் வாரங்களில் பொது மக்கள் தங்களுடைய குடும்பங்களை பாதுகாக்க தெருக்களில் இறங்கி சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நிலை ஏற்படுமெனவும் அவர் அரசாங்கத்தை எச்சரித்துள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைககளின் கண்ணோட்டம்,