சற்றுமுன் ஆரம்பமானது லண்டன் கற்பகவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம்
கிழக்கு இலண்டன் 'வோல்த்தம்ஸ்ரோ' கற்பக விநாயகர் ஆலயத்தின் 21 ஆவது வருடாந்த மகோற்சவமானது இன்று 15ஆம் திகதி (15.08.2022) திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
'வோல்த்தம்ஸ்ரோ' கற்பக விநாயகர் ஆலயத்தின் தேர்த்திருவிழாவானது பல்லாயிரக்கான மக்களோடு மிகப் பிரம்மாண்டமாக 28 ஆம் திகதி(28.08.2022) ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.
தேர்த்திருவிழாவன்று கோயிலின் 5 வீதிகள் ஊடாகவும் பறவைக் காவடிகள், பொம்மலாட்டங்கள் , மயிலாட்டம் ஆகியன இடம்பெறவுள்ளது.
அன்றைய தினம் கோவிலைச் சுற்றி இலவச வாகனத் தரிப்பிடங்களையும் ஏற்பாடு செய்துள்ளனர் ஆலய நிர்வாகத்தினர்.
அடியவர்களின் தாக சாந்திக்காக தண்ணீர் இ மோர்ப்பந்தல்கள் மற்றும் மதிய வேளை அன்னதானமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல வியாபார நிறுவனங்களின் மலிவு விற்பனையும் இடம்பெறவுள்ளது.
அடியவர்கள் அனைவரும் திருவிழாக்காலங்களில் சைவ ஆசாரசீலர்களாக வந்து கற்பக விநாயகரின் அருளைப் பெற அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் ஆலய நிர்வாகத்தினர் மற்றும் சிவாச்சாரியர்கள்.










தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

பாகிஸ்தான் - இலங்கை போராட்டங்களின் பின்னணி 11 மணி நேரம் முன்

லண்டனில் இலங்கையரை சுத்தியலால் அடித்துக்கொன்றவர் இவர்தான்... வெளியாகியுள்ள புதிய தகவல்கள் News Lankasri

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி புகழ் நித்யஸ்ரீயா இது?- தலைமுடியை இப்படி மாற்றி ஆளே மாறிவிட்டாரே? Cineulagam

ராகு பெயர்ச்சியால் சனி பகவானின் கட்டுக்குள் சிக்கப் போகும் ராசிக்காரர்கள்! இன்றைய ராசிப்பலன் Manithan
