கை கழுவச் சென்ற செஹன்ஸா திரும்பி வரவேயில்லை! துயரங்களின் முழு சாட்சியமாய் மாறியதேன்..(Video)

Colombo Sri Lanka Sri Lankan Schools
By Benat Nov 16, 2023 11:08 AM GMT
Report

வெல்லம்பிட்டி - வெரகொட கனிஷ்ட வித்தியாலயத்தில் குடிநீர் இணைப்பு பொருத்தப்பட்டிருந்த சுவர் இடிந்து விழுந்ததில் ஆறு வயதேயான செஹன்சா தன்னுயிர் ஈந்து இந்த உலகத்திற்கு விடைகொடுத்தார். 

வெல்லம்பிட்டி - வெரகொட கனிஷ்ட வித்தியாலயத்தில் நேற்றையதினம், குடிநீர் குழாய் பொறுத்தப்பட்டிருந்த சுவர் இடிந்து விழுந்ததில் ஆறு வயது சிறுமி உயிரிழந்ததுடன் ஐவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 இதில், மிகப்பெரிய துயரம் என்னவெனில், உயிரிழந்த சிறுமி செஹன்சாவின் பிறந்தநாளும் நேற்றுதான். தாய் வெளிநாட்டில், தனது பாட்டி மற்றும் சித்தியின் பராமரிப்பில் அந்த சிறுமி இதுவரையான நாட்களும் வாழ்ந்து வந்துள்ளார்.   

வெல்லம்பிட்டி பாடசாலையில் நேர்ந்த அனர்த்தம்! கல்வி அமைச்சரின் பணிப்புரை - இடைநிறுத்தப்பட்டுள்ள கல்வி நடவடிக்கை

வெல்லம்பிட்டி பாடசாலையில் நேர்ந்த அனர்த்தம்! கல்வி அமைச்சரின் பணிப்புரை - இடைநிறுத்தப்பட்டுள்ள கல்வி நடவடிக்கை

தாய் வெளிநாட்டில்

நேற்றையதினம், தனது பிறந்தநாளையொட்டி பல்வேறு கனவுகளுடன் பாடசாலைக்குச் சென்ற சிறுமி, அன்று தனக்கு ஏற்படவிருந்த விபரீதத்தை அறிந்திருக்கவில்லை.

உணவு இடைவேளையில் கை கழுவச் சென்ற செஹஸ்னா, திரும்பி வரவே முடியாத இடத்திற்குச் சென்று விட்டதை அறிந்த ஒவ்வொருவரும் துயரத்தில் ஆழ்ந்தனர். 

கை கழுவச் சென்ற செஹன்ஸா திரும்பி வரவேயில்லை! துயரங்களின் முழு சாட்சியமாய் மாறியதேன்..(Video) | Wall Collapsed In A School In Wellampitiya

அவரது தாயார் தினமும் தொலைபேசியின் ஊடாக அழைப்பெடுத்து சிறுமியுடன் கதைத்து வந்ததாக உயிரிழந்த சிறுமியின் சித்தி தெரிவித்துள்ளார்.

தனது மகள் மீண்டு வரப் போவதில்லை என்பதை அறிந்த அந்த தாயின் துயர நிலை எத்தனை வேதனைக்குரியது. 

உண்மையில், இந்த சிறுமியின் மரணத்திற்கும், படுகாயமடைந்த ஏனைய ஐவரின் பரிதாப நிலைக்கும் பதில் சொல்ல வேண்டியவர் யார்.  


பெருமளவான சிறுவர்கள் கல்வி கற்கின்ற குறித்த பாடசாலையில், அதிகமாக  சிறிய வயதுடைய பிள்ளைகள் பயன்படுத்தும் குடிநீர் குழாய் பொருத்தப்பட்டிருக்கும் சுவர் இடிந்து விழும் வரை கவனயீனமாக இருந்தது யாருடைய தவறு என்பதே தற்போதைய பேசுபொருளாக உள்ளது. 

நிச்சயமாக, திடீரென ஒரு அனர்த்தம் நேர்ந்து அந்த சுவர் இடிந்து விழுந்திருக்க வாய்ப்பில்லை, இதற்கு முன்னர் பார்ப்பவர்களால் அவதானிக்கப்படக் கூடிய அபாய நிலை காணப்பட்டிருக்கும் மற்றும் அவதானிக்கப்பட்டிருக்கும். 

இருந்தும், அவை கண்டுகொள்ளப்படவில்லை. இதன் விளைவு,  வாழ்வின் தொடக்கத்தை ஆரம்பித்த ஒரு இளம் மொட்டு மலரும் முன்னரே மரணித்துப் போனது. 

விபத்து இடம்பெற்று முடிந்த பின்னர், பாடசாலை மாணவர்களது பெற்றோர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த மக்களால் பாடசாலையின் அதிபர் தாக்கப்பட்டுள்ளார்.  பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.  விசாரணை செய்ய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. 

இது இவ்வாறு இருக்க, இது போன்று எத்தனை பாடசாலைகளில் அபாய நிலைகள் காணப்படும், அவை இதற்கு பிறகாவது திருத்தியமைக்கப்படுமா என்ற கேள்வி எல்லோர் மத்தியிலும் எழுந்துள்ளது.

செஹன்சாவின் மரணத்தை  ஒரு  படிப்பினையாகக் கொண்டு பாடசாலைகளில் இருக்கும் இதுபோன்ற இடங்கள் திருத்தியமைக்கப்படும் என நம்புவோம்.  


கை கழுவச் சென்ற செஹன்ஸா திரும்பி வரவேயில்லை! துயரங்களின் முழு சாட்சியமாய் மாறியதேன்..(Video) | Wall Collapsed In A School In Wellampitiya

கை கழுவச் சென்ற செஹன்ஸா திரும்பி வரவேயில்லை! துயரங்களின் முழு சாட்சியமாய் மாறியதேன்..(Video) | Wall Collapsed In A School In Wellampitiya

அமைச்சர் ரொசான் ரணசிங்கவிற்கு கூடுதல் பாதுகாப்பு: எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

அமைச்சர் ரொசான் ரணசிங்கவிற்கு கூடுதல் பாதுகாப்பு: எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

ஷாப்டரின் மரணம் குற்றச்செயல் என உறுதி: நீதிமன்றத்தால் தளர்த்தப்பட்ட உத்தரவு

ஷாப்டரின் மரணம் குற்றச்செயல் என உறுதி: நீதிமன்றத்தால் தளர்த்தப்பட்ட உத்தரவு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US