யாழிற்கு விஜயம் மேற்கொண்ட பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டு மாநிலத்தலைவர் (Photos)
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையிலான குழுவினர்கள் இன்று யாழ். மாவட்டத்திற்கு விஜயம் செய்தனர்.
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள யாழ். இந்திய கலாச்சார மத்திய நிலையத்தினையும் அங்கு அமைந்துள்ள திரைப்படகலைக்கூடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை பார்வையிட்டனர்.
இதனை தொடர்ந்து யாழ். பண்ணை கடற்கரையில் அமைந்துள்ள சிறைச்சாலைக்கும் விஜயம் மேற்கொண்டனர். பின் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டுவந்த இந்திய மீனவர்கள் தடுப்பில் வைக்கப்பட்ட நிலையில் அவர்களின் சுகநலன்களையும் விசாரித்து அவர்களுக்கான உலர் உணவுகள் உள்ளிட்ட பொதிகளும் வழங்கிவைத்தனர்.
இதனைதொடர்ந்து காலை 09 மணியளவில் யாழ். நல்லூர் கந்தசுவாமி கோவிலில் வழிபாட்டை மேற்கொண்டனர். ஆலய வழிபாட்டிற்கு பின்னர் நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து கலந்துரையாடினர். மேலும் யாழ். நல்லைக் கந்தன் ஆலய வழிபாட்டுடன் குடாநாட்டு பயணத்தை ஆரம்பித்தார்.
இவ்வாறான பயணங்களை முடித்துவிட்டு இந்திய பாஜக கட்சியின் தமிழ்நாட்டு தலைவர் அண்ணாமலைக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு யாழ்ப்பாணம் தனியார் விடுதியில் ஆரம்பமாகியுள்ளது.
குறித்த சந்திப்பில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் , வடக்கு மாகாண சபையின்
அவைத் தலைவர் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த விஜயத்தின் போது யாழ். இந்திய உதவித்துணைத் தூதுவர் ராகேஸ் நட்ராஜ் பாஸ்கர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் செந்தில் தொண்டமான், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவரின் மேலதிக செயலாளர் விஸ்வநாதன் அப்பானி உள்ளிட்ட முக்கியத்தவர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.




அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri
