இலங்கையில் வெடித்த வன்முறையில் தீக்கிரையாகிய வாகனங்கள் (Video)
அரசாங்கத்திற்கு எதிராக கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக அமைதியாக முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம் நேற்றைய தினம் வன்முறையாக மாறியிருந்தது.
கொழும்பில் காலி முகத்திடலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் நேற்று தாக்கியதையடுத்து நாடளாவிய ரீதியில் வன்முறைகள் அதிகரித்தன.
அமைதியான போராட்டத் தளங்கள் மீதான தாக்குதல்களால் ஆத்திரமடைந்த மக்கள், நாடு முழுவதும் வீதிகளில் இறங்கி, ராஜபக்ச ஆதரவு போராட்டக்காரர்களை ஏற்றிச் சென்ற பேருந்துகளையும் ஆளும் கட்சி அரசியல்வாதிகளின் சொத்துக்களையும் தாக்கத் தொடங்கினர்.
இதில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் இரு இல்லங்கள் உட்பட 25க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் அவர்களின் அலுவலகங்கள் உட்பட வாகனங்கள் அனைத்தும் அடித்து சேதமாக்கப்பட்டதுடன், எரித்து தீக்கிரையாக்கப்பட்டது.
மகிந்தவின் ஆதரவாளர்களை ஏற்றி வந்த பல வாகனங்கள், பேருந்துகள்களை மக்கள் எரித்து தீக்கிரையாக்கியிருந்தனர்.
நேற்று எறியூட்டப்பட்ட பேருந்துகள் இன்று அதிகாலை வரை அனைக்கப்படாது எரிந்துக்கொண்டே இருந்தது. இவ்வாறு எரியூட்டப்பட்ட பேருந்துகள் முற்றாக எரிந்த நிலையில் கொழும்பின் பல இடங்களிலும் வீதிகளும் எரிந்து சாம்பலாகிய நிலையில் தற்போதுவரை காட்சியளிக்கின்றது.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam