இஸ்லாமிய இறுதி சடங்குகளை மீறும் கட்டாய தகனங்களுக்கு சர்வதேச சட்டத்தரணிகள் சம்மேளனம் கண்டனம்
இலங்கையில் கொரோனாவினால் இறந்த முஸ்லிம்களின் பாரம்பரிய இஸ்லாமிய இறுதி சடங்குகளை மீறும் கட்டாய தகனங்களை சர்வதேச சட்டத்தரணிகள் சம்மேளனம் என்ற மனித உரிமைகள் நிறுவனம் கண்டித்துள்ளது.
இஸ்லாத்தில், தகனம் ஒரு பாவமாகவும், மனித எச்சங்களை இழிவுப்படுத்துவதாகவும் பார்க்கப்படுகிறது.
உலக சுகாதார அமைப்பின் குறிப்பிட்ட வழிகாட்டுதல், உயிரிழந்தோரின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்கிறது.
எனினும் இலங்கை அரசாங்கம் 2020 மார்ச் முதல் கொரோனாவினால் இறந்தவர்களை தகனம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.
உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல் படி கொரோனாவினால் உயிரிழப்போரை அடக்கம் செய்வது, எந்தவொரு பொது சுகாதார அபாயத்தையும் காட்டவில்லை.
எனவே இலங்கை அரசாங்கத்தின் கட்டாயத்தகனம், ஒருவரின் மத சுதந்திரத்திற்கான உரிமையையும், நடைமுறையில் மதத்தை வெளிப்படுத்தும் உரிமையையும் மறுப்பதாக சர்வதேச சட்டத்தரணிகள் சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri