சூடுபிடித்துள்ள தமிழக அரசியல் களம்..! முதலமைச்சர் விஜய் பதவியேற்றதும் அடுத்தடுத்து பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவுகள்
புதிய இணைப்பு
தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் இடம்பெற்ற ஆலோசனை கூட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான முறைப்பாடுகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஆலோசனையின் முக்கிய நோக்கம், மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் சட்டம் ஒழுங்கு நிலையை தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்பதையும், பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்வதையும் குறிக்கோளாக கொண்டதாக அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலமைச்சராக விஜய் பதவியேற்ற பிறகு சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததாகவும், இடையிடையே முக்கிய உத்தரவுகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
சட்டம் ஒழுங்கு தொடர்பாக தலைமைச் செயலகத்தில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர், தலைமை செயலாளர் சாய் குமார் உள்ளிட்டோருடன் தமிழக முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தியுள்ளார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை மற்றும் பொது பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், முதலமைச்சர் விஜய் தலைமையில் தலைமை செயலகத்தில் ஒரு முக்கிய உயர்மட்ட ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றுள்ளது.
மூன்றாம் இணைப்பு
சற்றுமுன்னர் சென்னையின் கிண்டி பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு ஆளுநர் அலுவலகம் நோக்கி முதலமைச்சர் விஜய் புறப்பட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக அவைத்தலைவராக தவெக எம்.எல்.ஏ.வான கருப்பையா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் அவரது பதவியேற்பு விழா தற்போது ஆளுநர் தலைமையில் நடைபெற்று வருகின்றது.
இந்நிகழ்வில் தமிழக முதலமைச்சர் விஜய்,ஆளுநர், முக்கிய தலைவர்கள், அதிகாரிகள் என பலர் கலந்துக்கொண்டுள்ளனர்.
தவெக தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்ற பதவியேற்பு நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்பு வந்தே மாதரம் பாடப்பட்டமை பேசுபொருளாகியிருந்தது.
இந்நிலையில், தற்போது தற்காலிக சபாநாயகருக்கு பதவிப்பிரமாணம் செய்யும் நிகழ்விலும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்பு வந்தே மாதரம் பாடப்பட்டமை சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இரண்டாம் இணைப்பு
சென்னை தலைமைச்செயலகத்தில் அலுவலக பணிகளை தொடங்கிய முதலமைச்சர் விஜய் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று காலை பதவியேற்று 3 திட்டங்களில் கையெழுத்திட்ட முதலமைச்சர் அதனை செயல்படுத்துவது குறித்து தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுள்ளது.
முதலாம் இணைப்பு
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதனையடுத்து பாதுகாப்புப்படைகள் சூழ அரசு வாகனத்தில் முதலமைச்சராக பதவியேற்ற தவெக தலைவர் விஜய் தலைமை செயலகத்தில் அரியனையில் சற்றுமுன்னர் அமர்ந்துள்ளார்.
இதன்போது தலைமை செயலகத்திற்கு வருகை தந்துள்ள முதலமைச்சருக்கு வீதிகளின் இருபக்கமும் மக்கள் சூழ்ந்து தனது வாழத்துக்களை தெரிவித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து முதலமைச்சர் அரியனையில் அமர்ந்த விஜயை முக்கிய அதிகாரிகள் வரவேற்று முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார்.
முதலமைச்சர் இருக்கையில் அமர்ந்து தற்காலிக சபாநாயகருக்கான கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார்.
இதன்கமைய நாளை புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam
உலகக் கோப்பை நடுவர் செய்த சைகை., FIFA-விற்கு இனவெறி கண்காணிப்பு அமைப்பு விடுத்த கோரிக்கை News Lankasri