ஆசிரியர் இடமாற்றத்தினை இரத்து செய்யக்கோரி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு
மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலையில் கடமையாற்றி வந்த ஆசிரியர் ஒருவரின் இடமாற்றத்தினை இரத்துச் செய்யக்கோரி பாடசாலைக்கு முன்பாக பெற்றோர்களால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டமானது இன்று( 27.04.2023 ) மட்டக்களப்பு - செம்மண்ணோடை அல்-ஹம்றா வித்தியாலய பாடசாலையின் முன்பாக இடம்பெற்றுள்ளது.
மேலும், பாடசாலைக்கு முன்பாக கூடியவர்கள் வாசகங்கள் எழுதிய பதாதைகளை கையில் ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திடீர் இடமாற்றம்
பாடசாலையில் கடமையாற்றி வந்த 5 ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு கல்வி கற்பித்து வந்த ஆசிரியர் பிரிதொரு பாடசாலைக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளதுடன் குறித்த ஆசிரியர் கடந்த 4 மாதங்களாக கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததுடன் இன்னும் பரீட்சைக்கு 6 மாத காலப் பகுதி இருந்தவேளை திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
இதனை தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் ஆசிரியரை மீண்டும் மேற்குறித்த பாடசாலைக்கு மீள நியமிக்கும்படி பெற்றோர்கள் தெரிவித்திருந்தனர்.
அத்துடன் இடை நடுவில் இடமாற்றம் செய்வதனால் மாணவர்களது கற்றல் கற்பித்தல் நடவடிக்கையில் குழப்பம் ஏற்பட்டு கல்வியில் பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் எங்களது பிள்ளைகளின் பரீட்சை பெறுபேறுகளில் பாதிப்பு ஏற்படக் கூடிய சூழ் நிலை காணப்படுவதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.
கோரிக்கை அடங்கிய மனு
இதேவேளை 5 ஆம் தர மாணவர்கள் இன்று பாடசாலைக்கு சமூகமளிக்கவில்லை என கோரிக்கை அடங்கிய மனுவினை பிரதி அதிபர் எம்.எச்.எம்.ஹக்கீமிடம் கையளித்துள்ளனர்.
மனுவை பெற்றுக்கொண்ட பிரதி அதிபர் நடவடிக்கைகளுக்காக வலயக்கல்விப் பணிப்பாளரின் கவனத்திற்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்துள்ளார்.
இதற்கமைய அதன் பிரதிகள் சுற்றாடல் துறை அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண ஆளுநர், மட்டக்களப்பு மத்தி வலய கல்வி பணிப்பாளர் ஆகியோர்களுக்கு மேலதிக நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை போர் பயிற்சி: களத்தில் Rafale, Sukhoi-30... News Lankasri
