புலம்பெயர்ந்தவர்கள் மீது மோசமான இனவெறி தாக்குதல்-செய்திகளின் தொகுப்பு
கனடாவில் புலம்பெயர்ந்தவர்கள் இருவர் மோசமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவின் பிரின்ஸ் எட்வர்ட் தீவில் நிகழ்ச்சி ஒன்றின்போது இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடந்த சனிக்கிழமை 1.30 மணியளவில் பிரின்ஸ் எட்வர்ட் தீவிலுள்ள Évangéline Recreation Centre என்ற இடத்துக்கு காவல்துறையினர் அழைக்கப்பட்டுள்ளனர். அங்கு புலம்பெயர்ந்தோர் இருவர் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
புலம்பெயர்ந்தோர் நம்பிக்கையுடன் வாழ்ந்துவரும் அந்த பகுதியில் இனவெறுப்புத் தாக்குதல் நடந்த விடயம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இங்கு வசிப்பவர்கள் இன வெறுப்புக்கு எதிரானவர்கள் என புலம்பெயர்தல் ஆதரவு அமைப்பு ஒன்றின் தலைவரான Yvonne Gallant என்பவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அந்த தாக்குதலைக் கண்ணால் பார்த்தவர்கள் சாட்சியமளிக்க முன்வருமாறு காவல் துறையினர் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய மதியநேர செய்திகளின் தொகுப்பு,
