வெற்றிலைக்கேணி றோ.க.த.க பாடசாலையில் இடம்பெற்ற சிறுவர் சந்தை
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி றோ.க.த.க பாடசாலையில் இன்று (10) சிறுவர் சந்தை இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் தலைமையில் இன்று காலை ஆரம்பமான சிறுவர் சந்தையில் தரம் ஒன்று தொடக்கம் தரத் ஐந்து வரையான வகுப்பு மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது, ஆரம்பப் பிரிவு மாணவர்கள் தமது கணித அறிவையும், சமூகத்தில் தொடர்பாடல் விருத்தி, வியாபார நுணுக்கங்கள், என்பவற்றை பாடசாலையிலேயே கற்றுக் கொடுக்கும் பயிற்சியாக குறித்த பாடசாலை மாதிரி சந்தை நிகழ்வு இடம்பெற்றது.
இணைப்பாடவிதான செயற்பாடு
குறித்த சந்தையில் மாணவர்கள் தமது வீட்டுத்தோட்டத்தில் விளைந்த காய்கறிகள், தேங்காய், கீரை வகைகள், பழங்கள், கைப்பணிப் பொருட்கள், கற்றல் உபகரணங்கள் போன்றவற்றை காட்சிப்படுத்தி வியாபாரத்தில் ஈடுபட்டனர்.
மேலும், சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் தமது விற்பனைப் பொருட்களை வியாபாரம் செய்த அதேவேளை பெற்றோரும், பாடசாலை மாணவர்களும் சிறுவர்களிடம் பணம் கொடுத்து பொருட்களைக் கொள்வனவு செய்தனர்.
குறித்த மாதிரி சந்தை மாணவர்களின் தனி ஆளுமை விருத்தியை வெளிக்கொண்டு வரும் வகையில் காணக்கூடியதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |