சுமந்திரனிற்கும் இவற்றிற்கும் தொடர்பில்லை! வேலன் சுவாமிகள் பகிரங்கம்(VIDEO)
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் எழுச்சிப் போராட்டத்திற்கும், நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கும் எந்த தொடர்பும் கிடையாது என சிவில் உரிமை செயற்பாட்டாளரும், இந்து சமய தலைவருமான வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் எழுச்சிப் போராட்டத்தினை வடக்கு, கிழக்கு சிவில் சமூகங்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த நிலையில்,தமிழ் தேசிய அரசியல் பரப்பிலிருந்த கட்சிகளின் ஆதரவு கோரப்பட்டிருந்தது.
இதற்கமைய, பல அரசியல் கட்சிகள் தமது ஆதரவினை வழங்கியதே தவிர இந்த போராட்டத்திற்கு சுமந்திரன்,சாணக்கியன் போன்றோர் உரிமை கோர முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் எம்.ஏ சுமந்திரனின் அரசியல் கொள்கையை முற்றாக நிராகரிப்பதாகவும், அவரின் அரசியல் பயணத்தை மறுதலித்து பயணிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்துபொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யபட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், இது தொடர்பில் எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
India AI Impact Summit 2026: விருந்தினர்களை திரும்பி பார்க்க வைத்த பட்டு புடவை அணிந்த ரோபோ News Lankasri
பேசியே எதையும் சாதிக்கும் அசாத்திய பேச்சாற்றல் கொண்ட 3 ராசிகள்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
உயில் எடுக்க வீட்டிற்குள் நுழைந்த காட்சியை எப்படியெல்லாம் எடுத்துள்ளார்கள் பாருங்க.. அய்யனார் துணை படப்பிடிப்பு வீடியோ Cineulagam
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam