வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான அதிவிசேட வர்த்தமானி
வாகன இறக்குமதி குறித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் (Anura Kumara Dissanayake) இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
1969ஆம் ஆண்டின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வாகன இறக்குமதி
பெப்ரவரி முதலாம் திகதி முதல் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் என ஜனாதிபதி அநுர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
முந்தைய அரசாங்கங்களைப் போலல்லாமல், தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்கள் வாகனப் பேரணிகளில் இருக்க மாட்டார்கள் என்றும், அனைத்து அமைச்சர்களும் ஒரே ஒரு வாகனத்தை மட்டுமே பயன்படுத்துவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri
