வாகன உமிழ்வு சான்றிதழ் தொடர்பில் வெளியான அறிவிப்பு
வாகன உமிழ்வு சான்றிதழ் (புகை சான்றிதழ்) வழங்கும் மையங்களின் கண்காணிப்பு பொறிமுறையை வலுப்படுத்த கூட்டு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மோட்டார் போக்குவரத்து திணைக்களம், எடை அளவீட்டு திணைக்களம், மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் மாவட்ட அலுவலகங்கள் மற்றும் பிரதேச செயலக அலுவலகங்கள் ஆகியவற்றில் கடமையாற்றும் பட்டதாரி சுற்றாடல் உத்தியோகத்தர்களை உள்ளடக்கி இந்த கூட்டு வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

வாகன உமிழ்வு சான்றிதழ் வழங்கும் மையங்கள் கண்காணிப்பு

இதேவேளை, வாகன உமிழ்வு சான்றிதழ் வழங்கும் மையங்களை கண்காணித்து, சாலையில் வாகன தணிக்கையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை போக்குவரத்து துறை அமைச்சர் தலைமையில் நடைபெறும் முன்னேற்ற ஆய்வு கூட்டத்தில் குறைகள் மற்றும் திருத்தங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
விவாகரத்து வழக்கில் ட்விஸ்ட்.. கண்கலங்கி அழுத ரோகிணி.. அதிர்ச்சியில் மனோஜ், விஜயா! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri