வெடுக்குநாறி ஆலயத்திற்கான தீர்வை மக்கள் எழுச்சி மூலமே நீதியை நிலைநாட்ட முடியும்
வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய வழிபாட்டின் போது கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் மக்கள் எழுச்சி மூலமே நீதியை நிலைநாட்ட முடியும் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
வவுனியா நீதிமன்றத்தில் நேற்று (12.03.2024 ) இடம்பெற்ற வெடுக்குநாறி ஆலய வழக்கு விசாரணையின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.
அத்துமீறல்கள்
மேலும் தெரிவிக்கையில், சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி ஆலயத்தில் பொலிஸாரால் அராஜகமாக கைது செய்யப்பட்ட பூசகர் உட்பட 8 பேரினதும் வழக்கு வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. எனினும், 19ஆம் திகதிக்கு வழக்கு மீண்டும் திகதியிடப்பட்டுள்ளது.

எந்தவித நியாயமான காரணங்களும் இல்லாமல் தொல்பொருள் திணைக்களத்தின் அறிக்கை மிகவும் பொய்யான விதத்தில் வழங்கப்பட்டு இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
எங்களை விட அங்கிருக்க கூடிய தொல்பொருள் திணைக்களத்தினர் தான் பலவித அத்துமீறல்களை செய்கின்றனர்.
கைவிலங்குடன் சிறையில் வாடிக் கொண்டிருக்கும் எமது உறவுகள் 8 பேரும் ஒழுங்கான உணவின்றி மிகவும் வேதனையாக இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில், ஈழத்தமிழினமாக மக்கள் எழுச்சிப் போராட்டத்தை வடக்கு, கிழக்கு தழுவி வவுனியாவில் போராட்டத்தை நடத்த வேண்டும்.
போராட்டம்
மக்கள் எழுச்சி தான் இலக்குகளை அடையவும் நீதியை நிலை நாட்டவும் செய்யும். சிவராத்திரி தினத்தன்று கூட ஒவ்வொரு போராட்டமாக தான் அந்த நிகழ்வை செய்ய முடிந்தது.

போராட்டம் மூலமே இலக்கை அடைய முடியும். அந்தவகையில் பல்கலைக்கழக மாணவர்கள், பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், தமிழ் தேசியப்பற்றாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராட வேண்டும்.
அதற்கான ஒத்துழைப்பை அனைவரும் வழங்க வேண்டும் என வேண்டி நிற்கின்றேன்” என தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
எதிர்நீச்சல் சீரியலின் புதிய வில்லன் ராவணன் ஆதிமுத்துவின் மனைவி யார் தெரியுமா? ஷாக் கொடுத்த புரோமோ Cineulagam
எதிர்நீச்சல் சீரியலில் வில்லன் ராவணன் ஆதிமுத்துவாக என்ட்ரி கொடுத்துள்ள நடிகர் இவர்தான்.. புகைப்படங்கள் இதோ Cineulagam