வவுனியா சன்னாசி கிராமத்தில் இருந்து பல்கலை தெரிவான மாணவர்கள் கௌரவிப்பு!
வவுனியா மாவட்டத்தில் புளியங்குளம் பிரதேசத்தில் உள்ள சன்னாசி பரந்தன் கிராமத்தில் உள்ள ஆதி விநாயகர் ஆலய திருவிழா இறுதி நிகழ்வு நேற்று (08) நடை பெற்றுள்ளது.
இரவு கலை நிகழ்ச்சிகளுடன் நிடைபெற்ற நிகழ்வில் சன்னாசி பரந்தன் கிர்மத்தில் இருந்து பல திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளதுடன் கலைஞர்களும் கொரவிக்கப்பட்டுள்ளார்கள்.
கௌரவிப்பு
இதன்போது சன்னாசி பரந்தன் கிராமத்தினை சேர்ந்த 33 மாணவர்கள், பல்கலை மற்றும் கல்வியியல் கல்லூரிக்கு தெரிவு செய்யப்பட்வர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளார்கள்.
கிராமத்தில் இருந்து புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 08 மாணவர்களும் கௌரவிக்கப்பட்டுள்ளார்கள்.
பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பேற்று வவுனியா கோவில் புளியங்குளம் முத்தமிழ் கலாமன்ற கலைஞர்களின் மாலைக்கு வாதாடிய மைந்தன் காத்தவராயன் புரண சரித்திர நாடகமும் அரங்கேற்றப்பட்டுள்ளது.