குப்பை கொட்டுபவர்களை அவதானிக்க வவுனியாவில் அதிரடி நடவடிக்கை!
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் வீதியில் குப்பை கொட்டுவதை அவதானித்து நடவடிக்கை எடுக்கும் பொருட்டு வீதிகளில் பல இடங்களில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்படுவதாக பிரதேச சபையின் தலைவர் பாலேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இவர் மேலும் தெரிவிக்கையில்,
சுற்றுச்சூழல் மாசு மற்றும் வீதியோர கழிவு அகற்றுவதில் ஏற்படுகின்ற பல்வேறு நெருக்கடிகளை கருத்தில் கொண்டு எமது பிரதேச சபைக்குட்பட்ட 57 இடங்களில் கண்காணிப்பு கமராக்கள் நேற்று(26.02.2026) பொருத்தப்பட்டுள்ளது.
குப்பை கொட்டுபவர்களுக்கு எதிரான கடும் நடவடிக்கை
வீதியோரங்களில் குப்பை கொட்டுவோரை கண்டறிந்து அவர்களுக்கு தண்டனை வழங்கும் நோக்கோடு குறித்த கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டதோடு பல்வேறு சட்ட விரோத செயற்பாடுகளும் இதன் ஊடாக கண்காணிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
