வவுனியா பொலிஸாரால் இளைஞரொருவர் கைது
வவுனியாவில் 22 வயதுடைய இளைஞரொருவர் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, சந்தை உள்வட்ட வீதியில் அமைந்துள்ள நகை விற்பனையகம் ஒன்றில் கடந்த 4 ஆம் திகதி சங்கிலி ஒன்று திருடப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த முறைப்பாட்டுக்கு அமைவாக வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அவர்களின் வழிகாட்டலில் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் திருடப்பட்ட சங்கிலி
மீட்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.





தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
