சீர்திருத்தப் பள்ளியில் இருந்து தப்பி வந்த மாணவன் பொலிசாரிடம் ஒப்படைப்பு
யாழ். அச்சுவேலி சீர்திருத்தப் பள்ளியில் இருந்து தப்பி வந்த 17 வயது மாணவன் வவுனியா பொலிசாரிடம் நேற்று இரவு ஒப்படைக்கப்பட்டார்.
யாழ். அச்சுவேலிப் பகுதியில் உள்ள சீர்திருத்தப் பள்ளியில் இருந்து தப்பி வந்த குறித்த மாணவன் வவுனியாவில் உள்ள தனது நண்பர் ஒருவரை தொடர்பு கொண்டு வவுனியாவிற்கு வந்துள்ளார்.
ஆனால் வவுனியாவிற்கு வந்த பின் நண்பன் தொடர்பு கொள்ளவில்லை.
இந்நிலையில் வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய போது, வவுனியா ஊடகவியலாளர் இருவருக்கு இது தொடர்பில் அப் பகுதியில் இருந்தவர்கள் தெரியப்படுத்தியுள்ளனர்.

சம்பவ இடத்திற்குச் சென்ற ஊடகவியலாளர்கள் குறித்த மாணவனுடன் மேற்கொண்ட உரையாடல்களின் போது குறித்த மாணவன் அச்சுவேலி பகுதியில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து தப்பி வந்தமை தெரியவந்தது.
இதனையடுத்து, அச்சுவேலி பொலிசார் ஊடாக குறித்த இரு மாணவர்கள் தப்பிச் சென்றதை உறுதிப்படுத்திய ஊடகவியலாளர்கள், வவுனியாவிற்கு தப்பி வந்த மாணவனை வவுனியா பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 17 மணி நேரம் முன்
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam