வவுனியாவில் அரசாங்க அறிவுறுத்தலை மீறி எரிபொருள் விநியோகம் (Photos)
வவுனியா பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அரசாங்க அறிவுறுத்தல்களை மீறி எரிபொருள் விநியோகம் இடம்பெற்றுள்ளமையால் அங்கு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
அரசாங்க அறிவுறுத்தல்களை மீறி நேற்று(21) எரிபொருள் விநியோகம் இடம்பெற்றதால் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் தமது கடமையை நிறுத்திவிட்டு அங்கிருந்து வெளியேறிச் சென்றுள்ளனர்.
அத்துடன் நேற்று (22) 3,4,5 ஆகிய இறுதி இலக்கங்களை கொண்ட வாகனங்களுக்கே எரிபொருள் வழங்கப்படும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த இலக்கங்களையுடைய வாகனங்கள் காலை முதல் வரிசையில் நின்ற போதும் எரிபொருள் வருவதற்கு தாமதமாகியமையால் மாலையில் இருந்து எரிபொருள் விநியோகம் இடம்பெற்றிருந்தது.
அறிவுறுத்தல் வழங்கப்பட்ட அளவை விட அதிகமாக குறித்த இலக்கங்கள் தவிர்ந்த 0, 8 ஆகிய இலக்க சொகுசு கார்களுக்கும் வேறு இலக்க மோட்டார் சைக்கிள்களுக்கும் எரிபொருள் நிரப்பப்பட்டுள்ளது.
குறிப்பாக மக்கள் வங்கியின் வன்னிப் பிராந்திய முகாமையாளருக்கு சொந்தமான கார் ஒன்றிற்கு 14 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எரிபொருள் வழங்கப்பட்டதுடன், பிறிதொரு அரச திணைக்களத்திற்கு சொந்தமான காரும் வரிசையின்றி எரிபொருள் பெற்றுச் சென்றுள்ளது.
முரண்பாடு ஏற்படல்
இதனால் அங்கு நீண்ட வரிசையில் நின்ற மக்கள், நீதியாக செயற்படும் படி எரிபொருள் நிரப்பு நிலையத்தினருடன் முரண்பட்டமையால் சிறிது நேரம் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை வவுனியா மக்கள் வங்கியினர் நேற்று வவுனியா ஐ.ஓ.சி
எரிபொருள் நிலையம் ஒன்றிலும் கலன்களில் பெட்ரோல் பெற்றுச் சென்றிருந்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.





எதிர்நீச்சல் தொடர்கிறது: ஜீவனாந்தமை கொலை செய்ய காத்திருக்கும் அடியாட்கள்.. ஆதி குணசேகரன் போடும் திட்டம் Cineulagam
