வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய பிரதான வீதி மக்கள் பாவனைக்காக திறந்து வைப்பு
வரலாற்று சிறப்பு மிக்க வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய பிரதான வீதிக்கு காப்பற் இடப்பட்டு மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த வீதியை இன்றையதினம்(23) வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் திறந்து வைத்துள்ளார்.
வரலாற்றுச்சிறப்பு மிக்க புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழாவான இன்றையதினம் நாடுபூராவும் இருந்து பெருமளவான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தந்திருந்தனர்.
வீதி திறந்து வைப்பு
இந்தநிலையில் அவர்களின் போக்குவரத்தினை சிரமமின்றி மேற்கொள்ளுவதற்காக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் வழிகாட்டுதலின் அடிப்படையில் மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் கீழ் 24 மில்லியன் ரூபா செலவில் 1.75 கிலோ மீற்றர் காப்பற் வீதிக்கு இடப்பட்டுள்ளது.
இந்தநிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன், பிரதேச மக்கள் என பலரும் கலந்து கொண்டிருத்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


