வவுனியா மாநகர சபையால் அங்காடி வியாபார கொட்டகை அகற்றம்!
வவுனியா மாநகர சபையினால் பழைய பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் காணப்பட்ட அங்காடி வியாபார கொட்டகை நேற்றையதினம் அகற்றப்பட்டுள்ளது.
அப்பகுதி வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களின் முறைப்பாடுகளிற்கு அமைவாகவே குறித்த கொட்டகை அகற்றப்பட்டுள்ளது.
முறைப்பாடு
வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள தனிநாயகம் அடிகளாரின் சிலை அருகே செருப்பு தைக்கும் அங்காடி வியாபார கொட்டகையில், இரவு வேளைகளில் தவறான நடவடிக்கை இடம் பெறுவதாகவும், அதனை சுற்றியுள்ள பகுதிகள் சுகாதார சீர்கேட்டிற்குட்படுவதாகவும் முறைப்பாடுகள் அளிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை குறித்த வியாபார கொட்டகை அகற்றப்பட்டு, பிறிதொரு இடம் தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இத்தொழிலில் ஈடுபட்ட விசேட தேவைக்குட்பட்ட பெண்ணிற்கு, விசேட தேவைக்குட்பட்டவர்களை பராமரிக்கும் காப்பகத்தில் இணைப்பதற்கான நடவடிக்கையினை மாநகரசபை வருமான பரிசோதகரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



வருமுன் காத்தல்: அனர்த்த காலத்தின் பேச்சாளர்கள் 4 மணி நேரம் முன்
பிக்பாஸ் 9 வீட்டில் இருந்து வெளியேறிய யாருமே எதிர்ப்பார்க்காத ஒரு பிரபலம்... யார் தெரியுமா? Cineulagam
வெற்றியின் சிகரத்தில் இருந்தாலும் மற்றவர்களை மதிக்கும் 3 ராசியினர்: யார் யார்ன்னு தெரியுமா? Manithan