அரசியலில் பழிவாங்கல்! வவுனியா மாநகரசபையின் முதல்வர் மீது குற்றச்சாட்டு
வவுனியா மாநகர சபையின் முதல்வரும், பிரதி முதல்வரும் தனக்கு அரசியல் ரீதியான பழிவாங்கலை மேற்கொண்டு தொழில் செய்வதற்கு இடையூறை ஏற்படுத்துவதாக இலங்கை தொழிலாளர் கட்சியின் வவுனியா மாநகர சபை உறுப்பினர் பாருக் பர்ஸ்சான் குற்றம் சாட்டியுள்ளார்.
வவுனியா மாநகர சபைக்கு உட்பட்ட மாடு அறுக்கும் தொழுவம் தொடர்பாக இன்று (19.07) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியா மாநகர சபையில் முதல்வருக்கு எதிராக வாக்களித்தமையால் எனது தொழில் மீது அரசியல் பழிவாங்கல் மேற்கொள்ளப்படுகின்றது.
மாநகர சபைக்குட்பட்ட தாண்டிக்குளம் மாட்டுத் தொழுவத்தின் குத்தகைதாரர் என்ற அடிப்படையில் வருடா வருடம் சபைக்கு செலுத்த வேண்டிய தொகையை உரியவாறு செலுத்தியே வருகின்றேன்.
இந்த நிலையில் சபை ஆரம்பித்து சில நாட்களிலேயே மாநகரசபை உத்தியோகத்தர்களின் பங்களிப்பு இல்லாமல் சபையின் பிரதி முதல்வர் தனிப்பட்ட ரீதியில் மாட்டுத் தொழுவத்திற்கு சென்று எனக்கு கீழ் பணி புரியும் ஊழியர்களை புகைப்படம் எடுத்தார்" என கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



