கனகராயன்குளம் வைத்தியசாலையில் ஆளணி பற்றாக்குறை நிலவுவதாக கவலை தெரிவிப்பு
வவுனியா- கனகராயன்குளம் வைத்தியசாலையில் ஆளணி பற்றாக்குறை நிலவுவதாக வவுனியா வடக்கு பிரதேச சபையின் தலைவர் எஸ். தணிகாசலம் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கனகராயன்குளத்தில் வாழும் மக்களின் நலன்கருதி கிராமிய வைத்தியசாலை ஒன்றை அமைக்குமாறு பல்வேறு தரப்பினரால் விடுக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரம் குறித்த வைத்தியசாலை அமைக்கப்பட்ட போதிலும் அதனை திறப்பதில் காலதாமதமாகி அண்மையில் திறக்கப்பட்டது.
எனினும் வைத்தியர் ஒருவருடன் உதவியாளர் நியமிக்கப்பட்ட போதிலும் குறித்த வைத்தியசாலைக்கு அதிகளவான நோயாளர்கள் வருகின்றமையால் வைத்தியசாலையை இயக்குவதற்கு ஆளணி தேவை அதிகரித்துள்ளது.
ஆளணி நிரப்பப்படும் பட்சத்தில் நோயாளர்கள் சிரமமின்றி தமது நோய்க்காக மருந்தினை பெறுவதுடன் நேர விரயமும் ஏற்படாது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பிடம் முறையிட்டும் இதுவரை எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
குடும்பத்திற்கு எதிராக மீனா செய்த காரியம், கோபத்தில் கடுமையாக திட்டிய ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம் News Lankasri