தமிழர் பகுதியில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த விஷேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்
வவுனியாவில் போதைப்பொருள் பாவனை மற்றும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த விஷேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளதோடு வவுனியாவிற்குரிய விஷேட தொலைபேசி இலக்கங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தற்காலத்தில் வடக்கு மாகாணங்களில் போதைப்பொருள் பாவனை, குற்றச்செயல்கள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது.
அந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவே விஷேட அதிரப்படையினர் களமிறங்கியுள்ளனர்.

விஷேட தொலைபேசி இலக்கம்
வவுனியாவில் பரவிவரும் போதைப்பொருள் வியாபாரம், போதைப்பொருள் பாவனை மற்றும்
குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் தொடர்பான நடவடிக்கையை அதிரடியாக
கட்டுப்படுத்தவே விஷேட அதிரடிப்படையினர் களமிறங்கியதோடு ஓமந்தை, புளியங்குளம்,
நெடுங்கேணி, கனகராயன்குளம் ஆகிய பகுதிகளில் இடம்பெறும் குற்றச்செயல்கள்,
போதைப்பொருள் தொடர்பான அறிவித்தல்களை வழங்கவே பின்வரும் விஷேட தொலைபேசி
இலக்கங்களும்
0718592379, 0702356404 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வீடு பறிபோகும் பயம் இல்லாமல் மனோஜ் செய்த காரியம், வெளுத்து வாங்கிய விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் அய்யனார் துணை வரை.. விஜய் டிவியின் டாப் 5 சீரியல்கள்.. லிஸ்ட் இதோ Cineulagam