விபத்தில் முதியவர் பரிதாபமாக பலி
வவுனியா தாலிக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் பரிதாப மரணமடைந்தார்.
இன்று (29) பிற்பகல் மன்னார் வீதியூடாக துவிச்சக்கர வண்டியில் வந்து கொண்டிருந்த குறித்த முதியவரை அதேதிசையில் பின்னால் வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.
விபத்தில் படுகாயமடைந்த முதியவர் நோயாளர் காவுவண்டியின் மூலம் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மரணமடைந்தார்.

தாலிக்குளம் பகுதியை சேர்ந்த ராஜகோபால் வயது 68 என்ற முதியவரே இவ்வாறு மரணமடைந்தார்.
மோட்டார் சைக்கிளை செலுத்திய மற்றைய இளைஞர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக பூவரசங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர்: பெற்றோர்களுக்கு குவியும் பாராட்டு News Lankasri
யாரிந்த பீற்றர் எல்பர்ஸ்... IndiGo தலைமை நிர்வாக அதிகாரியின் சம்பளம், சொத்து மதிப்பு எவ்வளவு News Lankasri